2024.06.05ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழுவினரின் வழிகாட்டலில் ஜம்இய்யாவின் ஊடகக்குழுவினரின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று தெஹிவளை 'ரோஸ்வூட் சிலோன்' வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
'மனித நேயத்திற்கான ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள்' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டிலுள்ள அச்சு ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் நவீன ஊடகங்கள் போன்றவற்றில் ஊடகப்பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.