2024.12.07ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் தலைவர் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களது தலைமையில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களது நெறிப்படுத்தலில் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், பணிகள் மற்றும் சமகால விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், ஜம்இய்யாவின் தலைவர், செயலாளர், பொருளாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோருடன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ACJU Media -